சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலுள்ள அறையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மே மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அறை பூட்டி இருந்ததால் தற்போது சோதனை செய்கின்றனர். சீனர்களுக்கு விசா தந்ததில் முறைகேடு செய்ததாக கார்த்தி சிதம்பரம் வீட்டில் மே 17ல் சோதனை நடந்தது.